ஆனந்தமான சிவானந்தசாலை
அன்புடன் வாழ்த்தி வணங்குதுமே
தானமறங்கலை ஞானமுயர்க
சாதனவாழ்வு தலை நிமிர்க
மானமுயர்ந்து நம் மாணவர்கள்தாம்
வானமுயர்ந்து புகழ் பெறுக
இராமகிருஷ்ண மணிமொழி வழியே
சகல மதம் புகல் ஒன்றினையே
பராவி வளரும் நம் பல்கலை நிலையே
பாரினில் ஓங்கிட வாழியவே
வாழ்க! வாழ்க! பாரினில் ஓங்கிட வாழியவே!
(பண்டிதர் வீ. சி. கந்தையா)
Audio file